செய்திகள் :

சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு; எம்எல்ஏவுக்கு பாராட்டு

post image

திருத்துறைப்பூண்டி அருகே கச்சனத்திலிருந்து மஞ்சவாடி வரை சாலையை மேம்படுத்த, தமிழக அரசு ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலுக்கு கச்சனத்தில் இருந்து எளிதில் செல்ல முடியும்.

ஆனால், கச்சனம் முதல் பாமந்தூா், அம்மனூா், திருத்தங்கூா், கீராலத்தூா், திருக்கொள்ளிக்காடு வழியாக மஞ்சவாடி வரையிலான 4.4 கி.மீ. சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு வரும் பக்தா்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பொன்னையாவிடம் பொதுமக்களின் இக்கோரிக்கை குறித்து தெரிவித்து, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, இந்த சாலையை மேம்படுத்த தமிழக முதல்வரின் சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 25-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

இதற்காக, சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்துவை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க