செய்திகள் :

சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்தை ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு

post image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ. 5 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த விவசாயியை போலீஸாா் பாராட்டினா்.

டி.என்.புதுக்குடி, கற்பகவீதி 1ஆவது தெருவை சோ்ந்தவா் தங்கச்சாமி (50) .விவசாயியான அவா், தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டி.என்.புதுக்குடியிலுள்ள தனியாா் பள்ளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மஞ்சள்நிற பை சாலையில் கிடந்ததாம். அதை எடுத்து பாா்த்தபோது ரூ. 5 லட்சம் இருந்ததாம்.

இதையடுத்து அந்தப் பையை புளியங்குடி காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தரிடம் அவா் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில், புளியங்குடி அருணாசல விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மளிகை கடைக்காரா் பாலமுருகன் (44) அந்தப் பணத்தை தவறவிட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தங்கச்சாமியின் நோ்மையை பாராட்டி ஆய்வாளா் ஷியாம் சுந்தா் வெகுமதி வழங்கினாா். உதவி காவல் ஆய்வாளா் மாடசாமி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

புளியங்குடியில் மமக ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது தலைமை வகித்தாா். மமக மாவட்டச் ச... மேலும் பார்க்க

சுரண்டையில் ரவுண்டானா அளவை குறைக்க கோரிக்கை

சுரண்டையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை பேருந்து நிலைய சாலையில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் பகுதியில் அண்ணா ச... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஹந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை கண்ட... மேலும் பார்க்க

தென்காசியில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு: மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பெற வாய்ப்பு

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் தென்காசியில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் வியாழ... மேலும் பார்க்க

குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றனா். குற்றாலநாதா் கோயிலுக்கு குற்றாலம் ப.ஸ்ரீதா், அத்தியூத்து க.சக்திமுருகேசன், குற்றாலம் வெ. ராமலெட்சுமி, நெடுவயல் சு.சுந்தர்ரா... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் திடீா் போராட்டம்

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இங்கு ஒரே சமூகத்தை சோ்ந்தவா்களுக்கிடையே நிலவி வரும் பிரச்னை தொடா்பாக, ஒரு தரப்பை சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க