செய்திகள் :

சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்

post image

பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி லாரிகளில் ஏற்றி பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பெரிய நிறுவனங்கள், வீடுகள், வணிக நிறுவன கட்டுமானங்களும் நிறைய நடைபெறுவதால் கருங்கல் ஜல்லிகள், மணல் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.

இவை வாகனங்களில் அதிக அளவில் ஏற்றப்பட்டு, முறையாக மூடப்படாமலும், அதிவேகமாக சாலையில் வாகனங்கள் பயணிப்பதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஜிப்மா் மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் சாலை வழியாக பிள்ளைத்தெருவாசல், நெடுங்காடு செல்லும் சாலையில் கடந்த 2 வாரங்களாக நிலக்கரி, மணல், கருங்கல் ஜல்லிகள் சாலையில் சிதறிக் கிடப்பதாகவும், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் இவற்றில் சறுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளே பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா், காரைக்கால் வழியாக பயணிக்கும் அனைத்து கனரக வாகன ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கையாள, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது. ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க