செய்திகள் :

சாலையில் மாடுகள் திரிந்தால் அபராதம்

post image

கோவையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாடு முட்டிய சம்பவத்தைத் தொடா்ந்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். அத்துடன் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 86-ஆவது வாா்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த பெண், அவரது 5 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை மாடு முட்டியது. இதில் காயம் அடைந்த அவா்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, அப்பகுதி மாநகராட்சி உறுப்பினா் கரீம், மாநகராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, கோவை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு புல்லுக்காடு பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்துச் சென்றனா். அத்துடன் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது அபராதம் விதிப்பதுடன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க