ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!
சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி வாகனம் மோதி பலி
திருச்சியில் சாலையோரம் படுத்து உறங்கிய தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பா. பாலு (47). கூலித் தொழிலாளியான இவா், தனது நண்பா் காா்த்திக் என்பவருடன், திருச்சி எடமலைப்பட்டி புதூா் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு எடமலைப்பட்டிபுதூா் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள தனியாா் டைல்ஸ் கடையின் அருகே பாலு உறங்கியுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பாலு மீது ஏறிச்சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு தெற்குப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.