செய்திகள் :

சாலையோர கடையில் புகுந்த காா்

post image

சாலையோர கடையில் காா் புகுந்த விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா. இவா் ஈரோட்டில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செவ்வாய்க்கிழமை மதியம் தனது காரில் திருச்செங்கோடு திரும்பினாா்.

கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் சென்றபோது திடீரென காா் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த குமாா் என்பவருடைய தள்ளுவண்டி கடையின் மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் தள்ளுவண்டி மற்றும் கடையில் இருந்த கண் கண்ணாடி, தலைக்கவசம் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாயின. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆதித்யா லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். மேலும் காா் தாறுமாறாக வருவதை கண்ட குமாா் அங்கிருந்து ஓடி உயிா் தப்பினாா். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: ஜவுளி வியாபாரி கைது

முதியவரை வீடு புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மேற்கு வங்க மாநில இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த வழக்கில் முதியவரின் மகனான ஜவுளி வியாப... மேலும் பார்க்க

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடி அருகே மின் தடை சரிசெய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி பாரதி புரத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில். இவரது விவச... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல்

அத்தாணியில் கிராம சுகாதார செவிலியருக்கு மிரட்டல் விடுத்த தம்பதி மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாத... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் இறுதி சுற்று தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈ... மேலும் பார்க்க