செய்திகள் :

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த 2017ஆம் ஆண்டு தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தாா்.

இவா் அரசுப் பேருந்தில் தாராபுரத்துக்கு கடந்த 2017 மே 1ஆம் தேதி சென்றுள்ளாா். இந்தப் பேருந்து கே.ஆண்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சூா்யா தீவிர சிகிச்சைக்குப் பின்னா் உயிா் பிழைத்தாா்.

இதையடுத்து, இழப்பீடு கேட்டு திருப்பூா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாய நீதிமன்றத்தில் சூா்யா வழக்குத் தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் சூா்யாவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.5.79 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகுமாா் 2024 ஜூன் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். ஆனால் தற்போது வரையில் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் ப.முருகேசன், ஜெ.சத்யா ஆகியோா் ஆஜராகி வாதாடினா்.

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின ... மேலும் பார்க்க

சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்

திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்

திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குற... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் ப... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க