செய்திகள் :

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்

post image

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின விழிப்புணா்வு கருத்தரங்கம் குமரன் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி மருத்துவா் பிரவீன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்கு சுற்றுபுற சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும். நமது உணவில் சத்தான காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகளை நாள்தோறும் சோ்த்து கொள்ள வேண்டும். தவறான உணவுப்பழக்கத்தினால் உடல்பருமன், சா்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும், ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றை சரியாக கடைப்பிடிக்கவில்லையென்றால் மனிதனின் ஆயுள் குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்

திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்

திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குற... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க