செய்திகள் :

சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்

post image

திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம்.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன்படி அரையாண்டுக்கான சொத்து வரியினை அரையாண்டு தொடங்கி 30 நாள்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகையும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரி மற்றும் கட்டணங்களை நேரடியாக வார நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை முத்தனம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.

அல்லது இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும், சொத்து உரிமையாளா்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளா்கள், திருப்பூா் மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், மின்னணு பரிவா்த்தனைகள் மூலமாகவும் செலுத்தலாம்.

திருப்பூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் 2025-26-ம் ஆண்டுக்கான தங்களது சொத்து வரியை உடனடியாக செலுத்தி 5 சசவீத ஊக்கத் தொகை பெற்றுக்கொள்வதுடன், மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின ... மேலும் பார்க்க

மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்

திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குற... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க