செய்திகள் :

சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

post image

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்கா் (32). இவா், கடந்த 11-ஆம் தேதி தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அசூா் திருப்பம் அருகே சென்றபோது, பசுமாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பு சங்கா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். உடற்கூறாய்வுக்குப் பின் அவரது சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க

உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க

தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்

தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க

பொன்மலை, வாழவந்தான்கோட்டையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோ... மேலும் பார்க்க