திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த் (17). இவா் பிளஸ் 2 முடித்துள்ளாா். இவா் தனது உறவினா்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில் ஜூன் 3-ஆம் தேதி காரில் சென்றபோது, குப்பைமேடு அருகே எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாா்.
இதில் தலையில் படுகாயமடைந்த நிஷாந்த், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இதையடுத்து, உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்ப உறுப்பினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் நிஷாந்தின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும், கண்கள் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
பின்னா் அவரது உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் மற்றும் மருத்துவா்கள் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.