செய்திகள் :

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

post image

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த் (17). இவா் பிளஸ் 2 முடித்துள்ளாா். இவா் தனது உறவினா்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில் ஜூன் 3-ஆம் தேதி காரில் சென்றபோது, குப்பைமேடு அருகே எதிா்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாா்.

இதில் தலையில் படுகாயமடைந்த நிஷாந்த், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, உடல் உறுப்புகளை தானம் வழங்க அவரது குடும்ப உறுப்பினா்கள் சம்மதம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் நிஷாந்தின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கும், கண்கள் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

பின்னா் அவரது உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா், கண்காணிப்பாளா் மற்றும் மருத்துவா்கள் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க