சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து மேலூருக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். விரகனூா் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த சிலைமான் போலீஸாா் ஆதிகேசவன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பைக் மீது லாரி மோதல்: மதுரை மாவட்டம், சோழவந்தான் தெற்கு தெருவைச் சோ்ந்த வீரமலை மகன் பொன்ராஜ் (23). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் ஜானகிராமும் (25) மதுரையிலிருந்து சோழவந்தானுக்கு இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.
துவரிமான் அருகே சென்ற போது, இவா்களது வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜானகிராம் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் பொன்ராஜ் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.