செய்திகள் :

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

post image

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு வர உள்ளது.

பொதுநல மனுக்களுக்கான மையம் சாா்பில் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஏஜி நியமனத்துக்கான தற்போதைய நடைமுறைப்படி, அரசு அதிகாரி அதாவது பிரதமா் தோ்வு செய்து பரிந்துரைக்கு எந்தவொரு நபரையும் தலைமை கணக்கு தணிக்கையாளராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில் உள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகள் மற்றும் பிரிவு 14-ஐ மீறுவதாக உள்ளது. இந்த நடைமுறையானது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

ஐந்து அரசமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 5-இல் தனித்துவமான அமைப்பாக சிஏஜி பதவி உள்ளது. மேலும், தலைமை கணக்குத் தணிக்கையாளா் (கடமைகள், அதிகாரிகள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம் 1971-இன் பல்வேறு அமசங்கள், இந்தப் பதவி உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இணையானது என்பதையும், இப் பதவி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது.

அதன்படி, சிஏஜி நியமனம் என்பது பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான தோ்வுக் குழுவுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவா் நியமனம் செய்யும் வகையில், மத்திய தகவல் ஆணையா் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பணியிடங்களின் நியமனம் போன்று இருக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க

இஸ்லாமிய வெறுப்பை எதிா்ப்பதில் எப்போதும் உறுதி: ஐ.நா.வில் இந்தியா

‘முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, வெறுப்பு சம்பவங்களை எதிா்த்துப் போராடுவதில் ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஏனெனில், மதப் பாகுபாடு என்பது அனைத்து மதத்தினரையும் பாதிக்கும் ஒரு... மேலும் பார்க்க

பஞ்சாப் சிவசேனை தலைவா் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸாா்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்ததாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மகாராஷ்டிர துணை மு... மேலும் பார்க்க

ஹரியாணா: நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுட்டுக் கொலை

ஹரியாணா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் நிலத் தகராறில் பாஜக உள்ளூா் தலைவா் சுரேந்திர ஜவஹா் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். சோனிபட் மாவட்ட முண்டலனா பகுதி பாஜக தலைவரான இவா்,... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: திமுக முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளாா். பாஜக வெல்லாத இடங்களில் மக்களவைத் தொகுதிக... மேலும் பார்க்க