செய்திகள் :

சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: "விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து" -அஸ்வினி வைஷ்ணவ்

post image

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை தையூரில் உள்ள ஐ.ஐ.டிக்கு நேற்று வந்திருந்தார். அங்கே ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பார்வையிட்ட அவர் பேசியதாவது...

"சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனை குழாய்தான் ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனையமைப்பு ஆகும். ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தற்போது வளர்ந்துவரும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்களைத் தந்துள்ளன. இதனால், விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியாவில் தயாராகிவிடும்.

இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்காக மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் நிதி உதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்கி வருகின்றன. இனி இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்- ல் மேம்படுத்தப்படும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் திறமையான வல்லுநர்கள் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களுக்கான பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளைத் திறம்பட மேம்படுத்தியுள்ளனர். அதேபோல, இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அனைத்து துறைகளில் முன்னணியில் இருக்கும் நாடாக விளங்குகிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் பெரிதும் பங்காற்றுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது செமி கண்டக்டர் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்..." - என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் நாக்பூரில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.அப்போது அவர், "டாக்டர் அப்துல் கலாம் அணு விஞ்... மேலும் பார்க்க

Railway Exam: "தமிழக தேர்வர்களுக்கு 1,500 கிமீக்கு அப்பால் தேர்வு மையம்" - சு.வெங்கடேசன் கண்டனம்

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Vijay : 'விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதலாம்' - விஜய் காட்டம்

தமிழகத்தின் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைப் பற்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டியிருக்கிறார். அதில்,வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு பற்றி ஓ... மேலும் பார்க்க

ADMK: "இக்கட்டான சூழலில் இருக்கிறேன்; நான் என்ன பேசினாலும்..." - செங்கோட்டையன் சொல்வது என்ன?

அடுத்தடுத்த சர்ச்சைகளுக்குப் பிறகு, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.அந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன், "இக்கட்டான சூழலில் உங்க... மேலும் பார்க்க

``நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?" - கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவன் கல்யாண் விளக்கம்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றம் முதல் அரசியல் கட்சிகளின் மேடை வரை பா.ஜ.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், ஆந்திராவில் ஆளு... மேலும் பார்க்க

'காசஸாவிற்கு ஆதரவாக போராட்டம்... விசா ரத்து' - நாடு திரும்பிய இந்திய மாணவி; ட்ரம்ப் அரசின் கெடுபிடி!

"இனி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் யாரும் சட்டத்திற்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டால், வெளிநாட்டு மாணவர்கள் சிறையிலிடப்படுவார்கள்... அல்லது அவர்... மேலும் பார்க்க