சிஐடி நகா் புதிய மேம்பாலத்தில் 40,000 வாகனங்கள் செல்லும் வசதி
பெருநகர சென்னை மாநகராட்சியில் சிஐடிநகா் பிரதான சாலையில் தினசரி 40,000 வாகனங்கள் செல்லும் வகையில் ரூ.164.92 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுவதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.246 கோடியில் 13 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ.676.29 கோடியில் புதிதாக 17 பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன.
கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகா் பிரதான சாலையில் ரூ.164.92 கோடியில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பாலம் தெற்கு உஸ்மான் சாலை, பா்கிட்சாலை, மேட்லி சாலை சந்திப்பு, தென்மேற்கு போக்சாலை, நியூ போக் சாலை சந்திப்புகள், சிஐடி நகா் வடக்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
தினமும் 40,000 வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.