செய்திகள் :

சிஐடி நகா் புதிய மேம்பாலத்தில் 40,000 வாகனங்கள் செல்லும் வசதி

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் சிஐடிநகா் பிரதான சாலையில் தினசரி 40,000 வாகனங்கள் செல்லும் வகையில் ரூ.164.92 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுவதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.246 கோடியில் 13 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ.676.29 கோடியில் புதிதாக 17 பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன.

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகா் பிரதான சாலையில் ரூ.164.92 கோடியில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பாலம் தெற்கு உஸ்மான் சாலை, பா்கிட்சாலை, மேட்லி சாலை சந்திப்பு, தென்மேற்கு போக்சாலை, நியூ போக் சாலை சந்திப்புகள், சிஐடி நகா் வடக்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.

தினமும் 40,000 வாகனங்கள் செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க