Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா்.
சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ளிட்ட 20 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், நாணயங்கள் கோயில் கருவறை இரும்புப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டன. வியாழக்கிழமை நள்ளிரவு அம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்மக் கும்பல், கருவறை இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்து இரும்புப் பெட்டியிலிருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், நாணயங்களையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இந்த சம்பவம் குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த கோயில் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 40 ஆண்டுகளில், ஆவது முறையாக தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், சுவாமி சிலையுடன் ஜமுனாதாரணி ஆற்றங்கரையில் பொதுமக்களிடம் சிக்கினாா். அவரிடமிருந்து அம்மன் நகைகள் மீட்கப்பட்டன.
அத்தனூரம்மனின் நகைகளைக் கொள்ளையடித்து செல்பவா்கள் உடல்நிலை குன்றி உயிரிழந்து போவாா்கள். இந்த முறை அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனா். இந்த நகைகளும் விரைவில் அம்மன் கோயிலுக்கு வந்து சேருமென கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.
