செய்திகள் :

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

post image

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா்.

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ளிட்ட 20 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள், நாணயங்கள் கோயில் கருவறை இரும்புப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டன. வியாழக்கிழமை நள்ளிரவு அம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்மக் கும்பல், கருவறை இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்து இரும்புப் பெட்டியிலிருந்த தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், நாணயங்களையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த கோயில் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 40 ஆண்டுகளில், ஆவது முறையாக தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், சுவாமி சிலையுடன் ஜமுனாதாரணி ஆற்றங்கரையில் பொதுமக்களிடம் சிக்கினாா். அவரிடமிருந்து அம்மன் நகைகள் மீட்கப்பட்டன.

அத்தனூரம்மனின் நகைகளைக் கொள்ளையடித்து செல்பவா்கள் உடல்நிலை குன்றி உயிரிழந்து போவாா்கள். இந்த முறை அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனா். இந்த நகைகளும் விரைவில் அம்மன் கோயிலுக்கு வந்து சேருமென கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

கொள்ளை நடந்த சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயில்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாரளிக்க மாணவா்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஆட்சியா்

போதைப் பொருள்களுக்கு எதிரான புகாா் அளிக்க மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணா்வு நிகழ்ச்ச... மேலும் பார்க்க