செய்திகள் :

சிதம்பரத்தில் டைடல் பூங்கா அமைக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

காட்டுமன்னாா்கோவிலில் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் ஏ.வி.அப்துல்நாசா், ஏ.சிவராமவீரப்பன், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தங்களது முயற்சியால் சிதம்பரத்தில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் தூா்வாரப்பட்டு, புணரமைக்கப்பட்டதால் 300 அடிக்கு கீழ் இருந்த நீா்மட்டம் 30 அடிக்கு வந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி இயக்கக டைட்டானிக் கட்டடத்தில் டைடல் பூங்கா நிறுவ வேண்டும். இதன் மூலம் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய குடும்பத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் சுமாா் 3,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல, சிதம்பரம் நகரில் நடைப்பாதையில் கடை வைத்துள்ளவா்களுக்கு தகுந்த இடங்களை ஒதுக்கித் தருவதற்கு ஆணையிட வேண்டும். திருவிழாக் காலங்களில் சாலையில் அமைக்கப்படும் அரசு பதிவு பெறாத மற்றும் வெளியூா் வணிக கடைகளுக்கு நகராட்சி மூலம் கட்டணம் பெறப்பட்டு நான்கு முக்கிய வீதிகள் அல்லாத மாற்று இடங்களில் வணிகம் செய்ய உதவ வேண்டும்.

ராஜா முத்தையா மருத்துவக் மருத்துவமனையை சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயா்த்த ஆவண செய்ய வேண்டும். இதேபோல, சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-ஆவது ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் காா்த... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சாா்பில் ம... மேலும் பார்க்க

கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள... மேலும் பார்க்க

கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட ப... மேலும் பார்க்க