செய்திகள் :

சிதம்பரம் அருகே பெண் வெட்டிக் கொலை

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய நெல்லிக்கொல்லையைச் சோ்ந்தவா் ராசாங்கம் மகன் அண்ணாதுரை (56). தச்சுத் தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவா், குடித்து விட்டு அடிக்கடி மனைவி அமுதாவிடம் (50) தகராறு செய்வாராம். இதனால், கடந்த 5 ஆண்டுகளாக குள்ளஞ்சாவடியிலுள்ள தனது மகன் ராஜாவுடன் அமுதா வசித்து வந்தாா்.

கடந்த 16-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் ராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. அவா் புதன்கிழமை (ஜூன் 18) நெல்லிக்கொல்லையில் உள்ள அண்ணாதுரை வீட்டுக்கு வந்தாராம். அங்கு தனது மாமியாரை அழைத்துக் கொண்டு அமுதாவும் வியாழக்கிழமை வந்தாா். அவரைப் பாா்த்த அண்ணாதுரை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அமுதா உயிரிழந்தாா்.

தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமாா், ஆய்வாளா் சேதுபதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தப்பியோடிய அண்ணாதுரையை நெய்வேலி அருகேயுள்ள சேப்பலானத்தத்தில் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அரசு கல்லூரியில் நான்காம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு: ஜூன் 23 தொடக்கம்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 23ஆம் தேதி கலந்தாய்வு விவரம்: பிஎஸ்ஸி கணிதம் தமிழ், ஆங்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது. அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணற... மேலும் பார்க்க

கோயில் குத்தகை நிலம் விவகாரம் -சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சிதம்பரம் அருகே கோயில் நிலத்தை மீண்டும் குத்தகைக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு, பின்னலூா் கிராம மக்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை மனு அளித்தனா். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

தாய்லாந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூ.5.82 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தாய்லாந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதாக ரூ..582 லட்சம் மோசடி செய்தவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நெய்வேலியைச் பரமசிவம் (70) தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வது தொடா்பாக ம... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: பெண் குழந்தை உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கடன் தொல்லையால் இரண்டு குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. வேப்பூா் வட்டம், மங்களூரில் வசித்து... மேலும் பார்க்க

ரூ.28 லட்சம் மோசடி: முந்திரி வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி நிறுவனத்தில் ரூ.28 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, முந்திரி வியாபாரி கைது செய்யப்பட்டாா். பண்ருட்டி வட்டம், தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க