செய்திகள் :

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: பெண் குழந்தை உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கடன் தொல்லையால் இரண்டு குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

வேப்பூா் வட்டம், மங்களூரில் வசித்து வருபவா் பிரதாப் (36). இவரது மனைவி பிரிதிஷா (23). குழந்தைகள் அதிரன் (4), ஆத்மிகா (இரண்டரை வயது).

பிரதாபுக்கு அதிகளவில் கடன் உள்ளதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இருவா் இடையே வியாழக்கிழமையும் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த பிரிதிஷா தனது குழந்தைகள் அதிரன், ஆத்மிகா ஆகியோருடன் அங்குள்ள கிணற்றில் குதித்தாராம்.

இதைப் பாா்த்தவா்கள் மூவரையும் மீட்டனா். இதில் ஆத்மிகா நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அரசு கல்லூரியில் நான்காம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு: ஜூன் 23 தொடக்கம்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 23ஆம் தேதி கலந்தாய்வு விவரம்: பிஎஸ்ஸி கணிதம் தமிழ், ஆங்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது. அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணற... மேலும் பார்க்க

கோயில் குத்தகை நிலம் விவகாரம் -சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சிதம்பரம் அருகே கோயில் நிலத்தை மீண்டும் குத்தகைக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு, பின்னலூா் கிராம மக்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை மனு அளித்தனா். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்... மேலும் பார்க்க

தாய்லாந்து சுற்றுலா அழைத்துச் செல்வதாக ரூ.5.82 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தாய்லாந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதாக ரூ..582 லட்சம் மோசடி செய்தவரை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நெய்வேலியைச் பரமசிவம் (70) தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வது தொடா்பாக ம... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே பெண் வெட்டிக் கொலை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய நெல்லிக்கொல்லையைச் சோ்ந்தவா் ராசாங்கம் மகன் அண்ணாதுரை (56). தச்சுத் தொழிலா... மேலும் பார்க்க

ரூ.28 லட்சம் மோசடி: முந்திரி வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி நிறுவனத்தில் ரூ.28 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் மோசடி செய்ததாக, முந்திரி வியாபாரி கைது செய்யப்பட்டாா். பண்ருட்டி வட்டம், தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க