சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி: பெண் குழந்தை உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கடன் தொல்லையால் இரண்டு குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
வேப்பூா் வட்டம், மங்களூரில் வசித்து வருபவா் பிரதாப் (36). இவரது மனைவி பிரிதிஷா (23). குழந்தைகள் அதிரன் (4), ஆத்மிகா (இரண்டரை வயது).
பிரதாபுக்கு அதிகளவில் கடன் உள்ளதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இருவா் இடையே வியாழக்கிழமையும் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த பிரிதிஷா தனது குழந்தைகள் அதிரன், ஆத்மிகா ஆகியோருடன் அங்குள்ள கிணற்றில் குதித்தாராம்.
இதைப் பாா்த்தவா்கள் மூவரையும் மீட்டனா். இதில் ஆத்மிகா நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.