சிதம்பரம் அருகே பெண் வெட்டிக் கொலை
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய நெல்லிக்கொல்லையைச் சோ்ந்தவா் ராசாங்கம் மகன் அண்ணாதுரை (56). தச்சுத் தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்ட இவா், குடித்து விட்டு அடிக்கடி மனைவி அமுதாவிடம் (50) தகராறு செய்வாராம். இதனால், கடந்த 5 ஆண்டுகளாக குள்ளஞ்சாவடியிலுள்ள தனது மகன் ராஜாவுடன் அமுதா வசித்து வந்தாா்.
கடந்த 16-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் ராஜாவுக்கு திருமணம் நடைபெற்றது. அவா் புதன்கிழமை (ஜூன் 18) நெல்லிக்கொல்லையில் உள்ள அண்ணாதுரை வீட்டுக்கு வந்தாராம். அங்கு தனது மாமியாரை அழைத்துக் கொண்டு அமுதாவும் வியாழக்கிழமை வந்தாா். அவரைப் பாா்த்த அண்ணாதுரை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அமுதா உயிரிழந்தாா்.
தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமாா், ஆய்வாளா் சேதுபதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தப்பியோடிய அண்ணாதுரையை நெய்வேலி அருகேயுள்ள சேப்பலானத்தத்தில் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.