செய்திகள் :

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: 3 இளைஞர்கள் பலி

post image

சின்னசேலம் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் மீது சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் தினேஷ்குமார் (25). இவரது மனைவி கீர்த்தனா (23) தம்பதிகளுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கீர்த்தனா அவரது பெற்றோர் ஊரான சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் கிராமத்தில் உள்ளார்.

திணேஷ்குமார் குழந்தையை பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்களான அய்யம்பெருமாள் மகன் வெங்கடேசன் (23), பழனிசாமி மகன் சிவசக்தி (36) உள்ளிட்டோர்களுடன் மரவாநத்தம் கிராமத்திற்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு அவரது ஊரான பாண்டியங்குப்பம் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்தை தினேஷ்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.

வியாழக்கிழமை இரவு சின்னசேலம் ரயில்வேகேட் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதியதில் மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனராம். தூக்கி வீசியதில் மூன்று இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

தூத்துக்குடி பிரச்னைகளை பிரதமரிடம் விவரித்த கனிமொழி எம்.பி.

தகவலறிந்து சின்னசேலம் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Three youths riding a two-wheeler near the Chinnasalem Railway Gate were hit by a goods van, killing all three on the spot.

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி: பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி

நீதிக்கும், அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று பொதுக்குழு தீர்ப்பு குறித்து அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைப... மேலும் பார்க்க

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொ... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதி !

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார். ஏற்கெனவே மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் அவர் ஆற்றிய உரையில், இந்த... மேலும் பார்க்க

அன்புமணி - ராமதாஸ் தரப்பு விசாரணை நிறைவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்தது. நேரில் ஆஜரான அன்புமணியிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. காணொளி வாயிலாக ஆஜரான ராமதாஸ் தரப்பு விளக்கத்தையும் ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவ... மேலும் பார்க்க