செய்திகள் :

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

post image

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. வயது மூப்பால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்காக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட பதிவில்,

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரனை அவர் சந்தித்து, அவரது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் புகைப்படமும் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

புற்றுநோய் நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சர் கங்கா ராம் புற்றுநோய் மையத்தைத் திறந்து வைப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

இந்த வருகையின் போது, ​​மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது அதிநவீன வசதிகளை முர்மு பார்வையிட்டார். அங்குள்ள நோயாளிகளுடன் உரையாடினார் என்று முர்முவின் அலுவலகம் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SUMMARY

President Draupadi Murmu personally met former Jharkhand Chief Minister and Jharkhand Mukti Morcha party leader Shibu Soren and inquired about his well-being.

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி நடவடிக்கை! ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உதம்பூர் மாவட்டத்தின் பிஹாலி பகுதியில், கடந்த ஓராண்டுக்கு மேலாகத் த... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்காகவே வாக்களிக்கின்றனர்; சாதிக்காக அல்ல: பிரசாந்த் கிஷோர்

பிகாரில் தேர்தல்களில் சாதி அடிப்படையில் வாக்களிக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு ஜன் சுராஜ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.பிகாரில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்... மேலும் பார்க்க

ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தின் காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பால் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டு 20 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கரா மற்றும் குலு ஆகிய மாவட்டங்களில், நேற்... மேலும் பார்க்க