செய்திகள் :

சிம்புவின் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்!

post image

நடிகர் சிலம்பரசனின் 49வது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிலம்பரசன் தனது 42வது பிறந்தநாளை இன்று (பிப்.3) கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த திரைப்படம், நடிகர் சிம்புவின் 49வது திரைப்படமாகும். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் இந்தாண்டு (2025) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எஸ்டிஆர் ரோல் நம்பர் 49’ என்று குறிப்பிட்டு நடிகர் சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் நடிகர் சிம்புவின் கைகளில் பொறியியல் புத்தகத்தை பிடித்தபடி காட்சியளிக்கிறார். மேலும், ‘மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்’ எனும் வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் பிப்.15-இல் ‘ராமாயணம்’ அனிமேஷன் படம் திரையிடல்

நடிகர் சிலம்பரசனின் 49வது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர்

இதன் மூலம் இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படத்தை ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியிருந்தார். அதற்கு பின்னர் 2 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு (2025) அவரது 49வது திரைப்படம் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் காம்போவில் தற்போது உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

வள்ளியூர் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுநெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்குச் சொந்தமான மணல் அள்ளும் லாரியை ஓட்ட... மேலும் பார்க்க

விடுதி அறையில் மாணவி தற்கொலை!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கோட்டயத்தின் பரம்புழாவைச் சேர்ந்த அனீட்டா பினாய் (வயது 21), இவரது பெற்ற... மேலும் பார்க்க

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க