செய்திகள் :

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையும் பணிச்சுமை!

post image

பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில்  முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என சமன்படுத்தியது.

இந்தத் தொடரில் சிராஜ் 185.3 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

வலிகளை மறந்துவிடுங்கள்

சிராஜ் பணிச்சுமை குறித்து எப்போதும் குறை சொன்னதில்லை. ஆனால், பும்ரா அதைக் குறிப்பிட்டு பல போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:

இந்தியாவுக்காக விளையாடும்போது வலி, வேதனைகளை மறக்க வேண்டும்.

எல்லையில் இராணுவ வீரர்கள் குளிர் குறித்து குறை சொல்கிறார்களா? ரிஷப் பந்த் என்ன செய்தார்? கால் உடைந்தும் பேட்டிங் செய்தார். அதைத்தான் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

சிராஜ் முன்னுதராணம்

140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை நீங்கள் பிரதிநிதிப்படுத்தி விளையாடுகிறீர்கள். அதைதான் சிராஜிடம் காண்கிறோம்.

சிராஜ் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் வழங்கி பந்து வீசிகிறார். அவர் எப்போதும் பணிச்சுமை எனக் கூறுவதில்லை.

5 டெஸ்ட் போட்டிகளில் 7-8 ஓவர்கள் கொண்ட ஸ்பெல் வீசுகிறார். ஏனெனில் கேப்டன் வேண்டுமென நினைக்கிறார். நாடும் அவரை நம்புகிறது.

பணிச்சுமை என்பது மனரீதியானது

பணிச்சுமை எனப் பேசுபவர்களை நீங்கள் ஆதரித்தால் உங்களுக்கு ஃபீல்டிங்கில் சிறப்பானவர்கள் கிடைக்கவே மாட்டார்கள்.

இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையே மறைந்துபோகும் என நம்புகிறேன். நான் இதை பலகாலமாக சொல்லி வருகிறேன்.

பணிச்சுமை என்பது உடல் ரீதியானது அல்ல, மனரீதியானது என்பதை நாம் அனைவரும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Mohammed Siraj has "debunked forever this business of workload", said India batting great Sunil Gavaskar, questioning the concept by asserting that playing for the country should be enough to "forget the aches", something that soldiers guarding the nation are doing routinely.

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை... மேலும் பார்க்க

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றமளித்தாலும், நியாயமான முடிவே கிடைத்துள்ளதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்... மேலும் பார்க்க

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட... மேலும் பார்க்க

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

தெலங்கானா காவல்துறை இந்திய வீரர் முகமது சிராஜ் குறித்து நெகிழ்ச்சியாக வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாதைச் சேர்ந்த முகமது சிராஜ் (31 வயது) இந்திய டெஸ்ட் அணிக்காக 2020 ... மேலும் பார்க்க

பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிக... மேலும் பார்க்க