செய்திகள் :

Doctor Vikatan: நடிகை தமன்னா சொல்லும் pimple treatment; எச்சில் தடவினால் பரு மறையுமா?

post image

Doctor Vikatan: நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு பருக்கள் அதிகம் வரும் என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அவரது வெளிப்படைத் தன்மை பாராட்டுக்குரியதே. ஆனால், பருக்களை விரட்ட அவர் சொன்ன சிகிச்சைதான் பயமுறுத்துகிறது. தூங்கி எழுந்ததும் காலையில், பல் துலக்குவதற்கு முன், உங்கள் வாயில் உள்ள எச்சிலைத் தொட்டு பருக்களின் மீது தடவினால், பருக்கள் உடனடியாக காய்ந்துவிடும் என்றும், தான் இதைத் தான் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எச்சில் என்பது அசுத்தமானதுதானே. அதை பருக்களின் மீது தடவுவது சரியானதா? தமன்னா போன்ற பிரபலங்கள் இப்படியெல்லாம் பேசினால், பொதுமக்கள் பலரும் அதை நம்பி பின்பற்ற ஆரம்பிக்க மாட்டார்களா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா

ஒருவரது எச்சில் என்பது பருக்களை விரட்டுவதற்கு எந்த வகையிலும் பயன்படாது. நடிகை தமன்னா குறிப்பிட்டுள்ளது மிகமிக தவறான சிகிச்சை. எச்சில் என்பது சுத்தமான ஒன்றல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவரது எச்சிலில் ஏராளமான பாக்டீரியா இருக்கும். ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் சுகாதாரம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும். ஒருவரது வயது, அவர் என்ன சாப்பிட்டார், பற்களில் சொத்தை உள்ளிட்ட வேறு பிரச்னைகள் உள்ளனவா, வாய் சுகாதாரத்தைப் பேணுவதில் அந்த நபர் எப்படிப்பட்டவர் என பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும்.  கிருமிகள் நிறைந்த எச்சிலை எடுத்து, இன்னொரு இன்ஃபெக்ஷனின் மேல் வைக்கும்போது, அது இன்னும்  மோசமான விளைவையே ஏற்படுத்தும். எனவே, இந்தச் சிகிச்சை கட்டாயம் தவிர்க்கப்பட  வேண்டும்.

பருக்களின் மேல் இதுபோல எச்சில் தடவுவது, வினிகர் தடவுவது, டூத் பேஸ்ட் வைப்பது போன்ற விஷயங்கள், சருமத்தை மிக மோசமாக பாதிக்கும். தவிர, இதுபோன்ற சிகிச்சைகள், சருமத்தில் பிக்மென்ட்டேஷன் எனப்படும் கருமையை அதிகப்படுத்தி, அதை நிரந்தரமாக்கும் ரிஸ்க்கும் இருக்கிறது.

பருக்கள், காயங்கள் என எதன் மீதும் எச்சில் தடவுவதைத் தவிருங்கள்.

எனவே, ஒருவருக்கு பருக்கள் வந்தால், முதலில் அவை எத்தகைய தன்மை கொண்டவை என பார்க்க வேண்டும். அதாவது அடிக்கடி வருகின்றனவா, ஹார்மோன் மாறுதல் காரணமாக பீரியட்ஸ் நாள்களின் போது மட்டும் வருகின்றனவா, பருக்கள் மறையும்போது கரும்புள்ளிகளை, தழும்புகளை விட்டுச் செல்கின்றனவா என்றெல்லாம் பார்க்க வேண்டும். அதற்கேற்பவே  பருக்களுக்கான சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும். சரும மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்ட க்ரீம் தடவுவது பருக்களையும் போக்கும், கரும்புள்ளிகளையும் ஏற்படுத்தாமல் காக்கும்.

எனவே, தயவுசெய்து பருக்கள், காயங்கள் என எதன் மீதும் எச்சில் தடவுவதைத் தவிருங்கள். பிரபலங்கள் சொல்வதை அப்படியே நம்பி பின்பற்றக்கூடாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?

வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது; கல் உப்பை சூரிய ஒளியில் காயவைத்து உபயோகித்தால் வைட்டமின் டி கிடைக்குமா என்கிற கேள்விகளை சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணிபு... மேலும் பார்க்க

Kerala: 2 ரூபாய் மருத்துவர் ரைரு கோபால் மறைவு; இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்; தலைவர்கள் இரங்கல்

கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ரைரு கோபால் நேற்று (ஆகஸ்ட் 3) காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 80.கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமா... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிகள் போக்குமா?

Doctor Vikatan:நாட்டு மருந்துக் கடைகளில் புதினா உப்பு, ஓம உப்பு என்று விற்கிறார்கள். அந்த உப்பைத் தடவினால் உடல் வலிகள் சரியாகும் என்கிறார்கள். இது உண்மையா, இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாமா?பதில் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம். விசேஷ நாள்களில் சாம்பிராணிப் புகையும் போடுவோம். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், அதைப் பார்த்துவிட்டு, ஊது... மேலும் பார்க்க

Health: அறிகுறிகளை கண்டுபிடிக்க தெரிந்தால்தான் இரும்புச்சத்துக் குறைபாட்டை சரி செய்ய முடியும்!

இரும்புச்சத்துக் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவா இருக்கு, அனீமிக், ரத்தசோகை, வெவ்வேறு பெயர்களில் நாம் குறிப்பிடப்பட்டாலும் பிரச்னை ஒன்றுதான். இதன் அறிகுறிகள், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை ஒவ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்குகற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்ப... மேலும் பார்க்க