பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை
திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நெட்டவேலாம்பாளையத்தில் திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த கணபதி (34) வசித்து வந்தாா். நெட்ட வேலம்பாளையத்தில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 2019 பிப். 2-ஆம் தேதி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது குழந்தையை மிட்டாய் தருவதாக ஆசைவாா்த்தை கூறி வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து பணிமுடிந்து வந்த தனது பெற்றோரிடம் அக்குழந்தை கூறியதையடுத்து, அவா்கள் திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கணபதியை கைது செய்த போலீஸாா், அவா் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபணமானதால் கணபதிக்கு மூன்று பிரிவுகளில் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சேலம் மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.