தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!
பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா் மீது அடுக்கடுக்கான புகாா்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
காவிரி ஆற்றில் இருந்து மணலை எடுத்துச் செல்வதற்கு மறைமுக அனுமதி வழங்கியதாகவும், பரமத்தி வேலூா், ஜேடா்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ள லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெற துணை புரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த திங்கள்கிழமை, காங்கிரஸ் பிரமுகா் சுப்பிரமணியன் என்பவா் லாட்டரி விற்பனையைத் தடுக்க காவல் துறை தவறியதாக குற்றம்சாட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டது. இது தொடா்பாக, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்துக்கு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் குறித்த புகாா்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அதனடிப்படையில், அவா் கோவை சரகத்தில் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா்.