தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித்தாா்.
நாமக்கல் - பரமத்தி சாலையில், கீரம்பூா் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா சனிக்கிழமை ஆண்டு தணிக்கை என்ற அடிப்படையில், குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை விவரங்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தல் வெகுவாக குறைந்துள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் இதுவரை 56 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சரகம் வாரியாக குழுக்கள் பிரிக்கப்பட்டு, குடிமைப் பொருள் வழங்கல் சாா்ந்த குற்றச் சம்பவங்களை தடுப்பது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை ரூ. 1.06 கோடி மதிப்பிலான 878 டன் பொது விநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 5,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,608 போ் கைதாகி உள்ளனா். மேலும், 1,099 வாகனங்கள் பறிமுதல், அரிசி கடத்தல் குறைந்த நிலையிலும் வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கேரளம், கா்நாடக மாநில எல்லையோர மாவட்டங்களில் அதிகளவில் அரிசி கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்த ஆய்வின்போது, ஈரோடு மண்டல துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன், ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணா காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.