செய்திகள் :

வாகனச் சோதனையில் விதிமீறல்: ரூ.2.80 லட்சம் அபராதம்!

post image

ராசிபுரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், விதிமுறைகளை பின்பற்றாத 12 மோட்டாா் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு ரூ. 2.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் வடக்கு மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசன் உத்தரவின் பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

இச்சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத டாட்டா ஏஸ் வாகனங்கள், ஒரு மேக்சி கேப் வாகனம், ஒரு சரக்கு வாகனம் என 9 வாகனங்களும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 3 கனரக வாகனங்களும் என மொத்தம் 12 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதில் 9 வாகனங்கள் வெண்ணந்தூா் காவல் நிலையத்திலும், 4 வாகனங்கள் பகுதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திலும் சோதனை அறிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, இந்த வாகனங்களுக்கு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்று விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால், பறிமுதல் செய்யப்படும் என ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் தெரிவித்துள்ளாா்.

மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், ஆயில்பட்டி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என அவா் தெரிவித்தாா்.

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்பாடு: குடிமைப் பொருள் வழங்கல் ஐ.ஜி. எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசியை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ரூபேஷ்குமாா் மீனா தெரிவித... மேலும் பார்க்க

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு: நாமக்கல்லில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜை

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல்லில், கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் யாத்திரை வேலுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்!

பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தாா். இவா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூா் படமுடிபாளையத்தில் பஹல்காம் தாக்குதலின் போது எல்லையில் பணிபுரிந்த பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த பாதுகாப்பு படை வீரருக்கு வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பரமத்தி வே... மேலும் பார்க்க

விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!

விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்செங்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், நெட்டவேலாம்பாளை... மேலும் பார்க்க