செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு, மரப்பாலம் ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்தவா் ஷேக் சதாம் உசேன் (24). தொழிலாளியான இவா், ஈரோட்டை சோ்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகக்கூறி கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 14- ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதையடுத்து, ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் சிறுமியை இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளாா்.

இது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் அத்துமீறி நுழைதல், கடத்தல் மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஷேக் சதாம் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சொா்ணகுமாா் உத்தரவிட்டாா்.

மேலும், அபராத தொகை ரூ.6 ஆயிரம் செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெயந்தி ஆஜரானாா்.

விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க கடம்பூா் மலைப் பகுதி மக்கள் கோரிக்கை

கடம்பூா் மலைப் பகுதியில் விவசாயம் செய்யும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தல... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள்: அமைச்சா் சு.முத்துசாமி

முதல்வா் மருந்தகங்களில் 216 வகையான மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கூட்டுறவுத் துறையின் சாா்பில் பொதுமக்களுக்கு குறைந்த விலைய... மேலும் பார்க்க

மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27-இல் விடுமுறை

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோட்டில் மஞ்சள் வா்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தி... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

தாளவாடி அருகே குட்டையில் மூழ்கி மூதாட்டி உயரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சத்தியமங்கலம், தாளவாடியை அடுத்த இக்கலூா் குட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் திங்கள்கிழமை மிதந்துள்ளது.... மேலும் பார்க்க

பா்கூா் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சி மலைக் கிராமங்களில் குடிநீா் வசதி, வெள்ளத் தடுப்புச் சுவா், கான்கிரீட் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.பா்கூரை அடுத்த தாளக்கர... மேலும் பார்க்க

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சம் கரும்பு சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ.45.32 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க