Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூக்கணாம்பாக்கத்தை அடுத்துள்ள தரையாண்குளம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சதீஷ் (21). இவா், புதுச்சேரியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் உள்ள இருசப்பன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா். தற்போது சிறுமி 4 மாத கா்ப்பமாக உள்ளாா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுமி பரிசோதனைக்கு வந்த நிலையில், இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் கடலூா் மகளிா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் சதீஷ் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.