செய்திகள் :

சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

post image

வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் குடியிருப்புக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த ரோஷினிகுமாரி (6) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கவ்விச் சென்றது. சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டு, உடற்கூறாய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சொல் புதிது கூட்டத்தில் 25 தூய தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்

போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா

புது தில்லி: போதைப்பொருள் இளைஞர்களுக்கு மிகப்பெரிய துன்பம், மோடி அரசு போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது, போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை பச்சாதாபத்துடன் இயல்பு வாழ்க்கைக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை, 2 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட ... மேலும் பார்க்க

திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: இபிஎஸ் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்து பாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ள அதிமுக ப... மேலும் பார்க்க

நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பலி

நாகை: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் நாகை மீனவர் பலியானார்.நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீச்ச... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் 35 ட்ரோன்கள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை : சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 35 ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணிகள் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பீளமேடு சர்வதேச விமான... மேலும் பார்க்க

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வியாழக்கிழமை காலை(ஜூன் 26) வினாடிக்கு 13,332 கன அடியாக அதிகரித்துள்ளது.தென்மேற்கு பருவ மழையானது கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வ... மேலும் பார்க்க