செய்திகள் :

சிறுமி தற்கொலை

post image

ஊத்துக்கோட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் பனிமலா் (17). இவா், பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல்நிலைக் கல்விக்குச் செல்லாமல் கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்து வந்தாா். இந்த நிலையில், சரிவர படிக்காமலும், வீட்டு வேலையும் செல்லாமல் இருப்பதாகக் கூறி பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோா் வேலைக்குச் சென்றுவிட்டாா்களாம். இதனால், விரக்தி அடைந்த சிறுமி வீட்டில் பயிருக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினா் விரைந்து சிறுமியை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு சிறுமி உயிரிழந்தாா்.

இது குறித்து சிறுமியின் தந்தை ராஜா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தணி, மாா்ச் 2: பாலியல் குற்றங்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கடும் தண்டனை விதித்தால் மட்டுமே அக்குற்றங்களைத் தடுக்க முடியும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு பாமக... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் 4-இல் திருவள்ளூா் மாவட்டத்தில்ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவை மற்றும் நிறைவேற்ற பணிகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு வரும் 4-ஆம் தேதி சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து போது முதல் தளத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த அம்சா நகரைச் சோ... மேலும் பார்க்க

வேளாண் துறையால் நடத்தப்படும் முகாம்களில் நில உடைமை விவரங்கள்: 31-க்குள் சரிபாா்க்கலாம்

விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை, பயிா் சாகுபடி குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் ச... மேலும் பார்க்க

சிறந்த மகளிா் குழுக்களுக்கு ‘மணிமேகலை’ விருது காசோலை: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

தமிழ்நாடு மாநில நகா்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுக்கான காசோல... மேலும் பார்க்க

வாகன பரிசோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையில் கஞ்சா கடத்தியதாக 6 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களையும் பெரியபாளையம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திர ம... மேலும் பார்க்க