செய்திகள் :

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

post image

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இருந்து விடியோ அழைப்பின் மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதியிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கூடுதல் போர்வை மற்றும் தலையணை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறையில் வழங்கக் கோரி தர்ஷன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் விசாரித்த நிலையில், தர்ஷன் விடியோ அழைப்பின் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ”தன்னை கடந்த 30 நாள்களாக சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிக்கவில்லை, எனது உடைகள் துர்நாற்றம் வீசுகிறது, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுங்கள்” என்று நீதிபதியிடம் தர்ஷன் கதறி அழுதுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறையின் விதிமுறைக்குள்பட்டு கூடுதல் போர்வை மற்றும் தலையணை வழங்க சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சிறை வளாகத்துக்குள் நடப்பதற்கு தர்ஷனுக்கு அனுமதி வழங்க வேண்டும், உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுக அனுமதிக்க வேண்டும் மற்றும் அவரின் பணத்தின் சிறை கேண்டீனில் சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, வேறு சிறைச்சாலைக்கு மாற்றக் கோரிய தர்ஷன் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

Actor Darshan has said that he is not even allowed to see sunlight in prison, so instead, give me poison.

இதையும் படிக்க : உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ர... மேலும் பார்க்க