செய்திகள் :

சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாக 2 பேர் அடித்துக் கொலை

post image

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகரி கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஆடு திருட வந்ததாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் அண்ணன், தம்பி இருவர் பலியாகினர்.

சிவகங்கை அருகே கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் சகோதர்கள் மணிகண்டன் (30), விக்னேஷ் (25). மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமாநகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் ஆள்கள் நடமாடும் ஓசை கேட்டதாம். அப்போது, அப்பகுதியில் இருந்தவர்கள் தோப்புக்குள் சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் மற்றும் விக்னேஷ் இருந்தது தெரிய வந்தது.

நள்ளிரவில் தோப்புக்குள் ஆடு, கோழி திருட வந்தவர்கள் என நினைத்து 2 பேரையும் கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். தப்பித்து ஓட முயற்சி செய்த இருவரையும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்தனர்.

இதையடுத்து 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர்.

ஆடு, கோழியை திருட வந்ததாகக் கூறி கிராம மக்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், முன் பகை காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது ஆடு திருட வந்த காரணத்தால் தாக்கப்பட்டு இறந்தார்களா என்பது குறித்து மதகுபட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரது உடலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 10 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுக... மேலும் பார்க்க

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மாநிலங்களவைத... மேலும் பார்க்க

30 நாள்களுக்குள் பட்டா: முதல்வரின் அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், விண்ணப்பித்த நாளில்... மேலும் பார்க்க

கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்

சென்னையில் கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகரா... மேலும் பார்க்க

போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!

சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளி... மேலும் பார்க்க