செய்திகள் :

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக கொல்லங்குடி மற்றும் நரிக்கோட்டை வரை நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

குளிர்சாதனங்களை பயன்படுத்த விரைவில் புதிய கட்டுப்பாடு: மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார்
நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளை, நாட்டசன்கோட்டை, கொல்லங்குடி, கண்டனிப்பட்டி, கீரனூர், அழகாபுரி, ராணியூர், சாத்தனி, பனங்காடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர் .

ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது: தொல். திருமாவளவன்

திருச்சி: ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் தீங்கானது என விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதி கார் டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருச்செந்தூரில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட நீதிபதி கார், முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இரண்டு பேர் ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இ... மேலும் பார்க்க

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க