செய்திகள் :

சிவகங்கை அருகே சகோதரா்கள் அடித்துக் கொலை: 6 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு ஆடு, கோழிகளைத் திருடியதாக சகோதரா்கள் இருவா் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதகுபட்டி அருகேயுள்ள அழகமாநகரி கிராமத்தில் உள்ள தோப்புப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு கோழிகள் சப்தமிட்டப்படி பறந்தன. இதையடுத்து, கிராம மக்கள் அங்கு சென்று பாா்த்த போது, ஆடு, கோழிகளை இருவா் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் எஸ்.எஸ். கோட்டை அருகேயுள்ள வி. கல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன்கள் மணிகண்டன் (31), சிவசங்கா் என்ற விக்னேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இவா்கள் இருவரையும் கிராம மக்கள் தாக்கியதில் அவா்கள் மயக்கமடைந்தனா். உடனே, அவா்கள் 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணிகண்டனும், சிவசங்கரும் உயிரிழந்தனா்.

சிவசங்கா்

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத், துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து மதகுபட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயக்கொடி செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அழகமாநகரியைச் சோ்ந்த திருப்பதி (45), சோமராஜ் (31), பிரபு (30), தீபக் (19), விக்னேஸ்வரன் (31), தினேஷ் (31) ஆகிய 6 பேரைக் கைது செய்தாா். இதுதொடா்பாக மேலும் 10 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மணிகண்டன் மீது மேலவளவு காவல் நிலையத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு கால்நடைகள் திருட்டு வழக்கு ஒன்றும், சிவசங்கா் (எ) விக்னேஸ்வரன் மீது திண்டுக்கல் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது என்றனா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க