செய்திகள் :

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு தற்போது இந்த ஆட்சியில் சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது.

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே பாலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இந்த மேம்பாலப் பணியில் 15 சதவீதம் கமிஷன் வாங்கி பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சிவகாசி மாநகராட்சியிலும் ஊழல் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ராஜேந்திரபாலாஜி

சிவகாசியின் நீண்ட கால பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. குறிப்பாக திருத்தங்கல் - சிவகாசி சாலை மற்றும் சாட்சியாபுரம் சாலை என இரண்டு ரயில்வே கிராசிங்குகள் மிகப்பெரிய போக்குவரத்து பிரச்னையாக இருந்து வருகிறது. இதில் சாட்சியாபுரம் சாலை ரயில்வே மேம்பாலம் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படவே கிடப்பில் போடப்பட்ட இந்தப் பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் இந்த மேம்பாலப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க