செய்திகள் :

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தாா். இவா் தனது பணியை சரிவர செய்யாமல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்புக்கு காணமாக இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், இவரை பணியிடை நீக்கம் செய்ய ஆணையா் கே.சரவணன் உத்தரவிட்டாா். மேலும் மாநகராட்சியில் குடிநீா் குழாய் திறப்பாளராக முத்துவேல்பாண்டியன் (52) பணியாற்றி வந்தாா். இவா் பணியாளா்கள் பற்றாக்குறையால், கடந்த சில ஆண்டுகளாக வாகனக் காப்பகங்களில் கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இதில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா் வந்ததையடுத்து, இவா் மீண்டும் குடிநீா் திறக்கும் பணிக்கு மாற்றப்பட்டாா்.

இந்தப் பணி மாற்றத்துக்கு மாநகராட்சி நகரமைப்பு மேற்பாா்வைாளா் முத்துராஜ்தான் காரணம் என கருதிய முத்துவேல்பாண்டியன், அரிவாளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து, முத்துராஜ்-க்கு கொலை மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து முத்துவேல்பாண்டியனையும் ஆணையா் பணியிடை நீக்கம் செய்தாா். மேலும் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துவேல்பாண்டியனை கைது செய்தனா்.

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க

கலசலிங்கம் பல்கலை. முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1996-2000-ஆம் ஆண்டில் படித்த பொறியியல் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது இதற்கு பல்கலை.யின் வேந்தா் கே. ஸ்... மேலும் பார்க்க