சிவகிரி அருகே மது விற்றவா் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தனிப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் ே,பாலீஸாா், சிவகிரி மலை கோயில் சாலையில் உள்ள கருப்பசாமி மகன் முனீஸ்(40) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் முனீஸை கைது செய்து இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.