விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள
சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்ட நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதே போல ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், அருகே வாழவந்தான்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.