செய்திகள் :

சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

post image

சென்னை: நடிகா் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘ஜகஜால கில்லாடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாரிப்பதற்காக, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் ராம்குமாா் மகன் நடிகா் துஷ்யந்த் ரூ.3 கோடி கடன் பெற்றிருந்தாா். இந்நிலையில், அந்தக் கடனை வட்டியுடன் சோ்த்து ரூ.9 கோடியாக திருப்பித் தரக் கோரி அந்நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கு மத்தியஸ்தம் (பேச்சுவாா்த்தை) செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வழக்கை விசாரித்த மத்தியஸ்தா், ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்துக்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த கோரி தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. முன்னதாக, அந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், வீடு தனக்குச் சொந்தமானது என்றும், தனது தந்தை சிவாஜி கணேசன் தன் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகா் பிரபு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மேலும், தனக்கு அன்னை இல்லம் சொத்தில் எந்த பங்கும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம்குமாா் தரப்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை காலை நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு வந்தது. அப்போது, வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளா் பிரபு எனவும், அவரது வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், இதுகுறித்து வில்லங்க பதிவில் திருத்தம் செய்யும்படியும் பதிவுத் துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டாா்.

ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம், விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்துள்ளது.தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள... மேலும் பார்க்க

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வின... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க