செய்திகள் :

'சீனாவை தவிர!' பரஸ்பர வரி 90 நாள்கள் ஒத்திவைப்பு - ட்ரம்ப் அடுத்த ட்விஸ்ட்; இந்தியா என்ன செய்யும்?

post image

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி...

உலகமே அதிர்ந்த நாள் என்றே சொல்லலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொன்னதுபோல, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார்.

அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

்https://twitter.com/TruthTrumpPosts/status/1910020628410945729ட

விட்டுக்கொடுக்காத சீனா!

வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைக் கண்டு பயந்து வியட்நாம் போன்ற நாடுகள் தாங்கள் அமெரிக்க பொருட்களின் மேல் விதிக்கும் வரியை ரத்து செய்வதாக அறிவித்தன.

மேலும், 75 நாடுகள் பரஸ்பர வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா இந்த வரி குறித்து வாயை திறக்கவே இல்லை.

சீனா மட்டும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியது. சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 84 சதவிகித வரி விதித்தது. பேச்சுவார்த்தை, மிரட்டல் என ட்ரம்ப் எவ்வளவோ தூது விட்டும் சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.

ட்ரம்ப்பின் அறிவிப்பு

இந்த வரியினால் இன்னொரு பக்கம், உலகளவில் பங்குச்சந்தை பெரும் சரிவை கண்டது. இதனால், உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப், "பரஸ்பர வரிகளின் அமல் 90 நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கு. சீனாவிற்கு 125 சதவிகித வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அறிவித்துள்ளார்.

இந்த 90 நாள்கள் அவகாசம் என்பது பிற நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த கொடுக்கப்பட்ட கெடு என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் இருந்தாலும்...
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் இருந்தாலும்...

அடுத்து இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இதுவரை பரஸ்பர வரி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத இந்தியா, இந்த 90 நாள்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளது இந்தியா. இருந்தும், பரஸ்பர வரி என்பது பிற நாடுகளுக்கு போல இந்தியாவிற்கும் சுமை தான். அதனால், இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

'அதிமுக போராட்டத்திற்கு கண்ணீர் அஞ்சலி' - சீமான் பதில்

அதிமுகவின் நீட் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்..."அதிமுகவின் போராட்டத்திற்கு நான் வேண்டுமானால் ஒரு கண்ணீர் அஞ்சலி ... மேலும் பார்க்க

'கத்தி படிக்க வேண்டிய பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் கத்தி கொண்டு வருகிறார்கள்' - தமிழிசை

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றி முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியதாவது..."தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இன்று திருச... மேலும் பார்க்க

"பாஜகவிற்கு விசிக தான் துருப்புச் சீட்டு; பாஜகவின் ஒரே நிலைபாடு இதுதான்!" - திருமா சொல்வது என்ன?

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வேலைகள் என தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாகி உள்ளன. இந்த நிலையில், கூட்டணி குறித்து... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் பரபரக்கும் நீட் விவகாரம்; 'தைரியமிருந்தால்...' அதிமுகவிற்கு துரைமுருகன் சவால்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்நாட்டில் நீட... மேலும் பார்க்க

மதிமுக: "நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" - மல்லை சத்யா சொல்வது என்ன?

மதிமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று (ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை வைக... மேலும் பார்க்க

"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ

ம.தி.மு.க கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று( ஏப்ரல் 19) அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. துரை ... மேலும் பார்க்க