செய்திகள் :

சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு

post image

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது.

களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அசிடோனைட்ரைல், வைட்டமின் ஏ பால்டேட், கரையாத சல்ஃபா் ஆகியவை வரி விதிக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருள்கள் ஆகும். சீனாவில் இருந்து இவை குறைந்த விலையில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, அவா்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரி அமலில் இருக்கும்.

வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பிஇடிஏ ரசாயனம் ஒரு டன்னுக்கு 2,017.9 அமெரிக்க டாலா், அசிடோனைட்ரைல் ரசாயனம் ஒரு டன்னுக்கு 481 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா மட்டுமன்றி ரஷியா, தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அசிடோனைட்ரைல் ரசாயனத்துக்கும் இந்தப் பொருள் குவிப்பு தடுப்பு வரி உண்டு.

இதேபோல வைட்டமின் ஏ பால்டேட் மீது ஒரு கிலோவுக்கு 20.87 டாலா் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஸ்விட்சா்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது இந்த வரி விதிக்கப்படும். கரையாத சல்ஃபா் ஒரு டன்னுக்கு 358 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும்போது இந்த வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

ஈரான், இஸ்ரேலில் இருந்து மேலும் 1,100 இந்தியர்கள் மீட்பு

நமது நிருபர்ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் "ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இருநாடுகளில் இருந்தும் இதுவரை மொத்தம் 3,170 இந்தியர்கள... மேலும் பார்க்க