சீன ரசாயனங்கள் மீது இந்தியா வரி விதிப்பு
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது.
களைக்கொல்லிகளில் பயன்படுத்தப்படும் பிஇடிஏ, மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அசிடோனைட்ரைல், வைட்டமின் ஏ பால்டேட், கரையாத சல்ஃபா் ஆகியவை வரி விதிக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருள்கள் ஆகும். சீனாவில் இருந்து இவை குறைந்த விலையில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, அவா்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வரி அமலில் இருக்கும்.
வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகத் தீா்வுகள் இயக்குநரகம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.
பிஇடிஏ ரசாயனம் ஒரு டன்னுக்கு 2,017.9 அமெரிக்க டாலா், அசிடோனைட்ரைல் ரசாயனம் ஒரு டன்னுக்கு 481 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா மட்டுமன்றி ரஷியா, தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அசிடோனைட்ரைல் ரசாயனத்துக்கும் இந்தப் பொருள் குவிப்பு தடுப்பு வரி உண்டு.
இதேபோல வைட்டமின் ஏ பால்டேட் மீது ஒரு கிலோவுக்கு 20.87 டாலா் வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஸ்விட்சா்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது இந்த வரி விதிக்கப்படும். கரையாத சல்ஃபா் ஒரு டன்னுக்கு 358 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதியாகும்போது இந்த வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.