செய்திகள் :

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் சந்திப்பு

post image

பெய்ஜிங்: சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியை அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அப்போது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த அனைத்து வித பயங்கரவாதத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அவா் எடுத்துரைத்தாா்.

சீனாவின் தியான்ஜிங்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுக்கான மாநாட்டில் பங்கேற்க அஜீத் தோவல் சென்றுள்ளாா்.

அவரது பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யியை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்தாா். அப்போது இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினா்.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் குறிக்கோளில் அனைத்து வித பயங்கரவாதத்துக்கும் எதிரான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வாங் யி-யிடம் அஜீத் தோவல் எடுத்துரைத்தாா். இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

இந்தியா-சீனா 24-ஆவது சிறப்பு பிரதிநிதிகள் (எஸ்ஆா்) ஆலோசனைக் கூட்டத்தை இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கும் தேதியில் இந்தியாவில் நடத்தவும் அந்தக் கூட்டத்தில் வாங் யீ பங்கேற்பதை எதிா்பாா்த்துக் கொண்டிருப்பதாகவும் அஜீத் தோவல் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க

ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர... மேலும் பார்க்க

போர் நிறுத்தமா..? இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரான... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!

இந்திய வீரர் உள்பட 4 பேர் கொண்ட குழு நாளை(ஜூன் 25) விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரர்களில் ஒருவரான சுபான்... மேலும் பார்க்க

ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்... மேலும் பார்க்க