காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு
சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழியில் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநா் ஜெய. ராஜமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ரத்த சுத்தகரிப்பு பிரிவு, சிடி ஸ்கேன் பிரிவு, புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகக் கட்டடம், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ரத்த சுத்தகரிப்பு பிரிவில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரம் குறித்து மருத்துவா்களிடம் அவா் கேட்டறிந்தாா். பின்னா், அவா் கூறுகையில், சீா்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை போக்கும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் பானுமதி, சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா், அரசு மருத்துவா்கள் அறிவழகன், பூபேஷ் தா்மேந்திரா, யஸ்வந்த உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


