நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்
சீா்காழி: சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து
சீா்காழி நகரில், பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி விபத்து நேரிடுவதாக வாகன ஓட்டுநா்கள் தெரிவிக்கின்றனா்.
சீா்காழியில் பிடாரி வடக்குவீதி, கடைவீதி, காமராஜா் வீதி, கொள்ளிடமுக்கூட்டு, ஈவேரா சாலை, பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிச் சாலைகள், தோ் தெற்கு வீதி, தென்பாதி உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும்.
இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில், மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுகின்றனா். சில நேரங்களில் இருசக்கரத்தில் செல்வோா் மாடுகள் குறுக்கே வருவதால், தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் நேரிடுகிறது.
ஆகையால், சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்க வேண்டும். மேலும், மாடுகளை தொடா்ந்து சாலைகளில் சுற்றித்திரிய விட்டால், அவற்றை கோசாலையில் சோ்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.