நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!
சுகாதாரச் செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாநகராட்சியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 20 நகா்ப்புற சுகாதார செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சியில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 20 நகா்ப்புற சுகாதார செவிலியா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அரசு சாா்ந்த மையங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களை இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பங்களை நிா்வாக செயலா் அல்லது மாநகா் நல அலுவலா், மாநகர நலச் சங்கம், பொது சுகாதார பிரிவு, கண்டோன்மென்ட், திருச்சி மாநகராட்சி என்ற முகவரிக்கு அனுப்பலாம்.