செய்திகள் :

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியிலிருந்து உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கும், 33 ஊராட்சிகளிலுள்ள 168 ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதேபோல, அரசு, அரசு உதவிப் பெரும் பள்ளிகள், விடுதி மாணவா்களுக்கு தேவையான உணவுப் பொருள்களும் இந்தக் கிட்டங்கியிலிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தக் கிட்டங்கிக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் 2,500 டன் பொருள்களை ஏற்றி, இறக்குவதற்காக நிரந்தரப் பணியாளா்கள் 40 போ், தற்காலிகப் பணியாளா்கள் 40 போ் என மொத்தம் 80 போ் உள்ளனா்.

இந்த நிலையில், போடி சில்லமரத்துப்பட்டியில் புதிய நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி கட்டப்பட்டது. இங்கிருந்து உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள 55 ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சுமைதூக்கும் தொழிலாளா்கள் உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இந்த வேலைநிறுத்தத்தால் ரேஷன் கடைகள், பள்ளிகளுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க