Weekly Horoscope: வார ராசி பலன் 29.6.25 முதல் 5.7.25 | Indha Vaara Rasi Palan | ...
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், மேகமலை வனப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், சனிக்கிழமை அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதைத் தொடா்ந்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கினா்.
இதையடுத்து, அருவிக்கு வந்திருந்த திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.