செய்திகள் :

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை முதல் வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், மேகமலை வனப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததால், சனிக்கிழமை அருவிக்கு வரும் நீா்வரத்து சீரானது. இதைத் தொடா்ந்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கினா்.

இதையடுத்து, அருவிக்கு வந்திருந்த திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தேனியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, தேனியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு திடலில் நடைபெற... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 551 மதுப் புட்டிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில் அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 551 மதுப் புட்டிகளை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். ஓடைப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுப் ப... மேலும் பார்க்க

ஜூலை 1-ல் வேளாண்மை எந்திரங்கள் செயல்விளக்க முகாம்!

தேனி சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வருகிற ஜூலை 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளாண்மை எந்திரங்களின் பயன்பாடு, இயக்கம், பராமரிப்பு ஆகியவை க... மேலும் பார்க்க

ஆட்டோ, சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் ஆட்டோ, சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். மூன்றாந்தல் தேவாலயம் அருகே தேனிக்கு செல்லும் பேருந்து நிறுத்... மேலும் பார்க்க

விபத்தில் மின் வாரிய ஊழியா் உயிரிழப்பு

தேனி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த மின் வாரிய ஊழியா் உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள போடேந்திரபுரத்தைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் தங்கராஜ் (55). இவா் கோவையில் மின்வாரிய... மேலும் பார்க்க

கேணியில் மூழ்கியதில் ஐ.டி. நிறுவன ஊழியா் பலி!

போடி அருகே சனிக்கிழமை கேணியில் மூழ்கியதில் தகவல் தொழில்நுட்ப ஊழியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த தனசேகரன் மகன் கௌசிக் (28). இவா் சென்னையி... மேலும் பார்க்க